Posts

கம்பனுக்கு முன் இராமாயணம்

கம்பனுக்கு முன் இராமாயணம் சங்க இலக்கியத்தில் அகநானூற்றுப் பாடலில் இலங்கைப் போருக்குச் செல்லுமுன்பு இராமன் ஓர் ஆலமரத்தினடியில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய குறிப்பு 'இடம் பெறுகிறது. இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டபோது சீதை வீசி எறிந்த அணிகலன்களைக் குரங்குக் கூட்டம் அணிவதறி யாமல் அணிந்து கொண்ட செய்தியைப் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகிறது. இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்க முற்பட்ட நிகழ்ச்சி கலித்தொகையில் இடம் பெறுகிறது. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இராமனைப் பிரிந்த அயோத்தி பற்றியும், கடலில் அணை கட்டியது பற்றியும் குறிப்புக்கள் முறையே இடம் பெறுகின்றன. ஆழ்வார்களுள் குலசேகராழ்வாரும் திருமங்கையாழ்வாரும் இராமாவதாரத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளனர். ஆழ்வார்கள் பாசுரங்களின் அழுத்தமான தாக்கத்தைக் கம்பராமாயணத்தில் உணரமுடிகிறது.கம்பராமாயணம் ஆறுகாண்டங்களையுடையது செள்ளை கம்பன் கழகப் பதிப்பின்படி 118 படலங்களும், 10366 பாடல்களும் 1293 மிகைப்பாடல்களுையும் உடையது. ஓட்டக்கூத்தர். உத்தரகாண்டம் எழுதியுள்ளார். கம்பரும் ஒட்டக்கூத்தரும் இராமாயண காவியம் எழுதினர் என்றும் கம்பன் கவிதையின் பெருமையுணர்ந்த ஒட்ட...